
கோழிக்கோடு விமான விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து மன வேதனை அடைந்ததாக அமித் ஷா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டு, அங்கு சென்று உதவுமாறு தேசிய பேரிட மேலாண்மைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தவிட்டுள்ளார். இதில் 174 பெரியவர்கள் பயணித்துள்ளனர். பத்து குழந்தைகள், ஐந்து பணிபெண்கள், இரண்டு விமானிகள் மொத்தமாக விமானத்தில் பயணித்துள்ளனர்.

இதில் ஒருவர் மூத்த விமானி, மற்றொருவர் இளைய விமானிகள், இதில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் என 191 பேர் இருந்ததாகவும் தெரிகிறது. இது சதிவிபத்தா, இல்லை விமானம் பழுது ஆனதால் ஏற்பட்ட விபத்தா என விரைவான விசாரணை நடைபெற்று வருகிறது.

கேரளா மாநில முதல்வர் , தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து மீட்புப் பணிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இன்னும் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற உறுதியான தகவல் வெளியாகவில்லை. ஆனால் விமானி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகிறது. இந்த விமானம் மத்திய அரசுடைய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகும்.