தமிழ் நாட்டில் கருப்பர் கூட்டம் என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்தி வரும் ஒரு சிலபேர் தொடர்ச்சியாக இந்து மத ரீதியான நம்பிக்கையை கேவலமாக விமர்சித்து காணொளி வெளியிட்டு வந்தது.
![Karuppar Koottam Youtube Channel Karuppar Koottam Youtube Channel](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/Karuppar-Koottam-Youtube-Channel-2.jpg)
அதிலும் கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் சொல்லுவதாக சொல்லிக் கொண்டு அவர்கள் வெளியிட்ட காணொளியோ அறுவெறுக்க தக்கதாக இருந்தது. உண்மையில் கந்த சஷ்டி கவசத்திற்கு பொருள் சொல்வதாக கூறியிருப்பது, தெரியாதவர்களுக்கு விளக்கம் சொல்வது போல் அந்த வீடியோ இல்லை. மாறாக கந்த சஷ்டி கவசம் கேட்கும் அனைவரது மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொற்களையும், உடல் மொழியையும் அவர் காணொளியில் வெளிப்படுத்தியிருந்தார்.
![Karuppar Koottam Youtube Channel Karuppar Koottam Youtube Channel](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/Karuppar-Koottam-Youtube-Channel-8.jpg)
இதற்கு முன்பு வரை பல இந்து கடவுள்களை தப்பாக பேசி அவர் காணொளி வெளியிட்டிருந்தாலும், கந்த சஷ்டி கவசம் என்பது தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமூகமாக இருக்க கூடிய முதலியார், தேவர் மற்றும் நாடார்களின் இல்லங்கள், மற்றும் தொழில் நிறுவனங்களில் பெரும்பாலும் தினமும் ஒலிக்க கூடியது. இதனால் யார் இந்த கருப்பர் கூட்டம் என்கின்ற கேள்வி எழுந்தது. அதற்கு வலதுசாரி ஆதரவாளரான கல்யாணராமன் பதில் அளித்து தொடர்ந்து காணொளி வெளியிட்டார். மேலும் கருப்பர் கூட்டத்தின் பின்புலம் என்ன என்பதையும் தொடர்ந்து அவர் பதிவு செய்தார்.
![Karuppar Koottam Youtube Channel Karuppar Koottam Youtube Channel](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/Karuppar-Koottam-Youtube-Channel-3-1.jpg)
இதனால் அந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. இந்துக்களின் தொடர் புகார் காரணமாக கருப்பர் கூட்டம் அமைப்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. ட்விட்டர் பக்கம் முடக்கப்படும் வரை கூட கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் கருப்பர் கூட்டம் தொடர்ந்து ஏளனமாக கருத்துகளை கூறி வந்தது. மேலும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்த அவர் விரைவில் இதை விட ஆபாசமான காணொளிகளை வெளியிட உள்ளதாக கூறி ஒரு காணொளியை வெளியிட்டார். இதனால் பிரச்சனை மேலும் தீவிரமானது.
![Karuppar Koottam Youtube Channel Karuppar Koottam Youtube Channel](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/Karuppar-Koottam-Youtube-Channel-1.jpg)
இதனை அடுத்து பாஜக கட்சி மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் கருப்பர் கூட்டம் யூடூப் சேனள் நடத்துபவர்களுக்கு வெளிப்படையாக மிரட்டல்கள் விட ஆரம்பித்தனர். அதிலும் கல்யானராமனின் மிரட்டல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இந்த நிலையில் வழக்கம் போல் இந்துக்களுக்கு எதிராக யார் பேசினாலும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் சில சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிகை அமைப்புகள் கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்தனர்.
![Karuppar Koottam Youtube Channel Karuppar Koottam Youtube Channel](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/Karuppar-Koottam-Youtube-Channel-6.jpg)
மேலும் கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக பேசிய பலரும் அவர்களின் கந்த சஷ்டி கவச காணொளியை பார்க்காமலேயே ஆதரவாக இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் குறித்து அவர் கூறிய கருத்துகளை சிறிய வீடியோவாக தொகுத்து வலதுசாரி அமைப்பினர் இது நியாயமா என்று கேள்வி எழுப்பினர். அப்போது தான் வழக்கமாக முற்போக்கு, பகுத்தறிவு பேசுபவர்கள் கூட அதில் இருந்த தகாதசெயலை புரிந்து கொண்டனர். மேலும், அவர் விமர்சனமாக எதையும் முன்வைக்கவில்லை தனது வக்கிரம் மற்றும் குறுக்குபுத்தியை வெளிப்படுத்தியுள்ளதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
![Karuppar Koottam Youtube Channel Karuppar Koottam Youtube Channel](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/Karuppar-Koottam-Youtube-Channel-4.jpg)
இதனை அடுத்து இடதுசாரி, இஸ்லாமிய அமைப்பு மற்றும் திமுக ஆதரவாளர்கள் கூட அவரை கண்டித்தனர். மேலும் வழக்கமாக இது போன்ற பிரச்சனைகளில் இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு ஆதரவாக நிற்கும் திமுகவின் பிரசன்னா போன்றவர்கள் கூட வாயை மூடினர். காரணம் கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்தவர்களுக்கு ஆதரவாக பேசினால் இந்துக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்று திமுக ஐடி விங் தங்கள் தரப்பை சேர்ந்தவர்களை ஆரம்பத்திலேயே அதட்டியதாக கூறப்படுகிறது. மேலும் திராவிட கழகம் தரப்பும் கூட இந்த விஷயத்தில் கருப்பர் கூட்டம் பக்கம் நியாயம் இல்லை என்று கருதி ஒதுங்கிக் கொண்டது.
![Karuppar Koottam Youtube Channel Karuppar Koottam Youtube Channel](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/Karuppar-Koottam-Youtube-Channel-5.jpg)
இதனிடையே கருப்பர் கூட்டம் மீது மிக கடுமையான பிரிவுகளில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் பயந்து நடுங்கி பதறிப்போன கருப்பர் கூட்டம், கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியிட்ட காணொளியை குறித்து தங்கள் முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் தாங்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் அவர்கள் தங்களின் சமூகத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழுந்தது. கந்த சஷ்டி விவகாரத்தில் தங்களுக்கு, இடதுசாரிகள், திராவிட இயக்கங்கள், சிறுபான்மை அமைப்புகள், பத்திரிகை தோழர்கள் ஆதரவாக நிற்பார்கள் என்று எகத்தாளமாக பேசி வந்த கருப்பர் கூட்டம், அப்படி எதுவும் அவர்கள் ஆதரவாக இல்லை மற்றும் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும் கூட யாரும் கண்டிக்கவில்லை என்பதால் இப்போது கதறி அழும் சூழலுக்கு சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.