![Echo of curfew relaxation - Tourists invading Kanyakumari seas Echo of curfew relaxation - Tourists invading Kanyakumari seas](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/12/Tourists-invading-Kanyakumari-Echo-of-curfew-relaxation-850x478.jpg)
இந்தியாவின் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பல மாதங்களுக்கு பின்பு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுவருகிறது. ஊரடங்கு தளர்வுகள் காரணமாக மீண்டும் கன்னியாகுமரி, சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத் துவங்கியுள்ளனர்.
![Echo of curfew relaxation - Tourists invading Kanyakumari seas Echo of curfew relaxation - Tourists invading Kanyakumari seas](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/12/Tourists-invading-Kanyakumari-Echo-of-curfew-relaxation-3.webp)
சென்ற ஒன்பது மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக இந்தியாவின் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்காததால் மாக்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் தற்சமயம் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் சுற்றுலாதலங்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
![Echo of curfew relaxation - Tourists invading Kanyakumari seas Echo of curfew relaxation - Tourists invading Kanyakumari seas](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/12/Tourists-invading-Kanyakumari-Echo-of-curfew-relaxation-4.webp)
இதனையடுத்து சர்வதேச சுற்றுலா தலமாக காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தற்சமயம் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாபயணிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அதேப்போன்று கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.
![Echo of curfew relaxation - Tourists invading Kanyakumari seas Echo of curfew relaxation - Tourists invading Kanyakumari seas](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/12/Tourists-invading-Kanyakumari-Echo-of-curfew-relaxation-2.webp)
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில், சுற்றுலா பயணிகள் கடலில் பயணிக்கும் வகையில் படகு போக்குவரத்திற்கும் அனுமதிக்க பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் அதில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்ற 9 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் இல்லாத நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் அதிகமான வருகை கன்னியாகுமரி பகுதி சிறுபெரும் வியாபாரிகள் மற்றும் ஹோட்டல் முதலாளிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.