
ஐஐடி சென்னையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்க ஒரு பில்டரை உருவாக்கியுள்ளனர்.
நைலான் அடிப்படையிலான நானோ-கோட்டடு பில்டர், செல்லுலோஸ் பேப்பரில் பாலிமர் பூச்சை பயன்படுத்துகிறது. இது எலக்ட்ரோ ஸ்பின்னிங் செய்முறையைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார்கள்.
பூச்சு துகள்கள், காற்றில் உள்ள நுண் மைக்ரான் அளவிலான தூசி துகள்களை திறம்பட அகற்ற உகந்ததாக இது இருக்கும். இந்த பில்டர் முறை தற்போது பயனர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பயனர்கள் சோதனை மூலம் சரிபார்க்கப்பட்டவுடன், மொத்த உற்பத்திக்கு பரிந்துரைக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்திற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ நிதியுதவி அளித்து வருகிறது. இதற்கு முன்னதாக இது பாதுகாப்பு பயன்பாடுகளுக்காக உருவாக்கப்படவிருந்தது. அதன் பின்னர், தொற்றுநோய் நெருக்கடி உருவாகவே, இது தற்சமயம் சுகாதாரப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
வேதியியல், பொறியியல் துறையைச் சார்ந்த ரகுராம் செட்டி மற்றும் பொறியியல் வடிவமைப்புத் துறையைச் சார்ந்த சரவண குமார் உள்ளிட்ட ஐ.ஐ.டி-சென்னையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களின் கூட்டு முயற்சியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.
நானோ -கோட்டட் வடிகட்டி, முகக்கவசங்கள், சுவாச சாதனங்கள், ஆபரேஷன் தியேட்டர்களில் உள்ள காற்று சுத்திகரிப்பு அமைப்பு, விமான கேபின்கள், கவச வாகன இயந்திரங்கள், கணினி ஹார்ட்-டிஸ்க் வடிகட்டிகள், நியூமேடிக் கருவிகள் ஆகியவற்றின் துகள்களை வடிகட்டி, அவற்றின் திறனை அதிகரிக்கிறது.
தற்போது ஆராய்ச்சியாளர்கள் நானோ பொருட்களின் பூச்சு அளவுருக்களை மொத்த உற்பத்திக்கு மலிவு விலையில் மேம்படுத்தவும் வைரஸ் தடுப்பு பண்புகளை சோதிக்கவும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
பல அடுக்கு முகக்கவசங்களை உருவாக்க, ஒன்றுக்கு மேற்பட்ட நானோ பொருள் பூச்சுகளைக் கொண்ட கலப்பு நானோ-கோட்டட் வடிகட்டிகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்கள்.