தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மற்றொரு நபரான காவலர் முத்துராஜ் மறைவாக இருந்தார்.
![Sathankulam Murder Case: CBCID Police Seized Muthuraj Bike](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2020/07/sathankulam-murder-case-cbcid-police-seized-muthuraj-bike.jpg)
இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீசார் அறிவித்தனர். இந்த நிலையில் தலைமறைவான காவல் அதிகாரி முத்துராஜை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். முதலாவதாக அவரது இரு சக்கர வாகனத்தை சிபிசிஐடி போலீசார் ஒட்டப்பிடாரம் அருகே கீழமங்கலம் காட்டுப்பகுதியில் இருந்து கைப்பற்றி இருந்தனர். இதனால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
+1
+1
+1
+1
+1
+1
+1